search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு"

    தீபாவளியை முன்னிட்டு தருமபுரி கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீரென ஆய்வு நடத்தினர்.
    தருமபுரி:

    தீபாவளியை முன்னிட்டு தருமபுரி மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு வார காலமாக உணவு பாதுகாப்பு துறையினர் இனிப்பு வகைகள் மற்றும் உணவு வகைகள் தயார் செய்யும் இடங்களுக்கு நேரடியாக சென்று திடீர் ஆய்வு நடத்தி வருகின்றனர். 

    இந்த ஆய்வில் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் பிருந்தா மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் உள்பட உணவு பாதுகாப்புத்துறை குழுவினர்கள் ஈடுபட்டனர். 

    மேலும் இனிப்பு பொருள்களில் அதிக செயற்கை வண்ணங்கள் உள்ளதா? பாலால் செய்யப்பட்ட இனிப்புகளின் சேமிக்கும் நிலை மற்றும் காலாவதியாகும் தேதி குறிப்பிடப்பட்டுள்ளதா? இனிப்பு மற்றும் கார வகைகளின் துர்நாற்றம் ஏதேனும் வீசுகிறதா? பொட்டலங்களில் பேக்கிங் செய்து விற்கப்படும் உணவுகள், உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் எண் உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்தனர்.
    ×